ADDED : ஏப் 10, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
கரூர் : கரூர் அருகே வாங்கல் சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
அப்போது, திருச்சி மாவட்டம் தொட்டியம் காட்டுப்புத்துாரை சேர்ந்த கோவிந்தன் என்பவர், லாரியில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் எடுத்து வரப்பட்ட, 5,40,790 ரூபாய் பறமுதல் செய்யப்பட்டு, கரூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
