ADDED : மார் 18, 2026 07:24 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
அருகே மொச்சகொட்டாம்பாளையம் பகுதியில், வட்டார கல்வி அலுவலர்
சகுந்தலா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு, 7:00
மணிக்கு சோதனை மேற்கொண்-டனர்.
அப்போது, பெரிய குளத்துபாளையம்
பண்டரிநாதன் கோவில் தெருவை சேர்ந்த துரைமுருகன் என்பவர், அரவிந்த்
ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது காரில், உரிய ஆவணங்கள் இல்லாததால், 6 லட்சத்து, 27 ஆயிரத்து,
850 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
