sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிராமப்புற இளைஞர்கள் 3 மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

/

கிராமப்புற இளைஞர்கள் 3 மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கிராமப்புற இளைஞர்கள் 3 மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கிராமப்புற இளைஞர்கள் 3 மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : அக் 09, 2025 12:48 AM

Google News

ADDED : அக் 09, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், அக். 9

கிராமப்புற இளைஞர்கள், மூன்று மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், மாநில ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் கிராமப்புற இளைஞர்களுக்கு மூன்று மாத சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் கலந்துகொள்ள குறைந்தபட்சம் பிளஸ் 2 முடித்து, தன்னார்வலர்களாக உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு, மூன்று மாத கால பயிற்சி வழங்கப்படவுள்ளது.

பயிற்சியில் சேர கட்டணமாக, 1,000 ரூபாய் இணையதளம் வாயிலாக செலுத்தப்பட வேண்டும். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் இணைந்து பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும். https://forms.eduqfix.com/certificate/add என்ற இணையதள வாயிலாக பதிவுகள் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு கரூர் மாவட்ட பஞ்., வள மைய அலுவலர் கார்த்திக்கேயனை-90801 61414 - என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us