/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீயணைப்பு நிலையம் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி
/
தீயணைப்பு நிலையம் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி
தீயணைப்பு நிலையம் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி
தீயணைப்பு நிலையம் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி
ADDED : அக் 17, 2024 01:24 AM
தீயணைப்பு நிலையம் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி
கரூர், அக். 17-
வடகிழக்கு பருவ
மழையை எதிர்கொள்ளும் பொருட்டு, கரூர் தீயணைப்பு நிலையம் சார் பில், பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி முகாம், திருமாநிலையூர் அமராவதி ஆற்றில் நேற்று நடந்தது.தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும், தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இதனால், வடகிழக்கு பருவமழையின் போது, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில், வெள்ளத்தில் சிக்கியவர்களை, மீட்கும் பொருட்டு செயல்படுவது குறித்து, கரூர் அருகே திருமா நிலையூர் அமராவதி ஆற்றில், நேற்று கரூர் தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல், உதவி மாவட்ட அலுவலர்கள் திருமுருகன், கோமதி மற்றும் தீயணைப்பு வீரர்கள்
பங்கேற்றனர்.