நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், செப். 20-
லாலாப்பேட்டை, வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, மகிளிப்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழை சாகுபடிக்கு வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
கடந்த மாதம் முதல் வாய்க்காலில் தண்ணீர் செல்வதால், வாழைத்தார்கள் நல்ல முதிர்ச்சி அடைந்து வருகிறது. அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள், லாலாப்பேட்டை ஏலம் கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று பூவன் தார், 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், ரஸ்தாளி, 350 ரூபாய் என விற்கப்பட்டது.