/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கள்ளச்சாராயம் விற்பனை; 2 வாலிபர்களுக்கு குண்டாஸ்
/
கள்ளச்சாராயம் விற்பனை; 2 வாலிபர்களுக்கு குண்டாஸ்
ADDED : அக் 26, 2024 06:28 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார் தீவிர சோத-னையில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்ட விரோதமாக விற்பனை செய்வ-தற்காக, 5 லிட்டர் கள்ளச்சாராயம், 150 லிட்டர் கள்-ளச்சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடித்தனர். இது தொடர்பாக விசாரணை செய்ததில், பழனிவேல், 37, பிரகாஷம், 32 ஆகியோர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், பழனிவேல், பிர-காசம் ஆகிய இருவர் மீதும், குண்டர் தடுப்பு சட்-டத்தில் நடவடிக்கை எடுக்க, நாமக்கல் கலெக்ட-ருக்கு, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் பரிந்தரை செய்தார். அதன்படி, கலெக்டர் உமா, இருவ-ரையும் குண்டாசில் கைது செய்ய உத்தர-விட்டார். தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் உள்ள இருவருக்கும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்-பட்டது.