/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சந்தையூர் வார சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
/
சந்தையூர் வார சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
ADDED : மே 05, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:சந்தையூர் வார சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை மும்முரமாக நடந்தது.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி சந்தையூரில் நேற்று
வார சந்தை கூடியது. ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த
சில நாட்களாக, வெயில் அதிகம் இருப்பதால் ஆடு, கோழிகள் விற்பனை
குறைவாக இருந்தது. நேற்று கூடிய சந்தையில் சீரான நிலையில் ஆடு, கோழிகள்
விற்கப்பட்டது. 7 கிலோ கொண்ட ஆடு ஒன்று, 5,500 ரூபாய், நாட்டு
கோழிகள் கிலோ, 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.