sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாளை கார்த்திகை மாத பிறப்பு பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறு

/

நாளை கார்த்திகை மாத பிறப்பு பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறு

நாளை கார்த்திகை மாத பிறப்பு பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறு

நாளை கார்த்திகை மாத பிறப்பு பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறு


ADDED : நவ 15, 2024 02:05 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாளை கார்த்திகை மாத பிறப்பு

பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறு

கரூர், நவ. 15-

நாளை (16ம் தேதி) கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, நேற்று கடை வீதிகளில் பக்தர்கள் அணியும் மாலை, காவி வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள், கார்த்திகை முதல் நாளான நாளை முதல் தங்கள் விரதத்தை தொடங்குகின்றனர். இதை முன்னிட்டு, கரூர் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள கடைகளில் பக்தர்கள் அணியும் மாலை, காவி வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை துவங்கியது. பக்தர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சந்தனமாலை, ருத்ராட்ச மாலை, ஸ்படிகமாலை ஆகியவற்றை அணிந்து கொள்கின்றனர். விரத நாட்கள் முடிந்த பிறகு, மாலைகளை அகற்றி மீண்டும் அடுத்த ஆண்டு அதனை அணிந்து கொள்வதும், துணை மாலையாக மற்றொரு மாலையை அணிந்து கொள்வதும் வழக்கமாகும்.

பல்வேறு வகையான மாலைகள், 100 முதல், 400 ரூபாய் வரை விற்பனையானது. மாலைகளில் பொருத்தப்படும் ஐயப்பன் உருவம் பொறித்த டாலர்கர், 20 முதல், 50 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது தவிர கருப்பு, பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் வேட்டி, துண்டு, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனையானது.

கார்த்திகை மாதம் நாளை பிறக்க உள்ளதை முன்னிட்டு, விரதம் மேற்கொள்ளும் வீடுகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஐயப்பன் கோவில்களில் பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு

வருகின்றன.






      Dinamalar
      Follow us