/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருவிழாவில் தரமற்ற பொருட்கள் விற்பனை: உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல்
/
திருவிழாவில் தரமற்ற பொருட்கள் விற்பனை: உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல்
திருவிழாவில் தரமற்ற பொருட்கள் விற்பனை: உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல்
திருவிழாவில் தரமற்ற பொருட்கள் விற்பனை: உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல்
ADDED : மே 30, 2024 07:08 AM
கரூர் : கரூரில், தரமற்ற டெல்லி அப்பளம் போன்ற பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பறிமுதல் செய்தனர்.
கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா முக்கிய நிகழ்ச்சியான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்புதல் நேற்று நடந்தது. பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளில் பானி பூரி, மசால் பூரி, காலிப்ளவர், சில்லி, டெல்லி அப்பளம் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.
கரூரில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையில் சேறும், சகதியுமாக உள்ள இடத்தில் தரை மீது போடப்படும் விரிப்பில், ஈரமான அப்பளத்தை காய வைக்கின்றனர். அந்த இடத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு கடைகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிட்ட எச்சில் தட்டுகள் மற்றும் காகிதங்களை காய வைக்கப்பட்ட அப்பளங்களின் மீதே பொதுமக்கள் துாக்கி வீசி சென்றுள்ளனர்.
இந்த அதிர்ச்சிகரமான வீடியோ வைரலானது. இதை அறிந்த கரூர் நகர உணவு பாதுகாப்பு அலுவலர் மதுரைவீரன், அங்குள்ள கடைகளை ஆய்வு செய்தார். சுகாதாரமற்ற முறையில் காய வைக்கப்பட்ட, 20 கிலோ ஈரமான டெல்லி அப்பளங்கள், செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தி தயாரித்த, 7 கிலோ காலிப்ளவர் சில்லி என மொத்தம், 27 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.