/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாட்டுக்கோழி, ஆடு விற்பனை மும்முரம்
/
நாட்டுக்கோழி, ஆடு விற்பனை மும்முரம்
ADDED : ஆக 10, 2025 01:03 AM
கிருஷ்ணராயபுரம், இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தையில், ஆடு, கோழிகளின் விற்பனையும், விலையும் சற்று அதிகமாக காணப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து, சந்தையூரில் நேற்று வாரச்சந்தை நடந்தது. சந்தையில் ஆடு, கோழிகள், மற்றும் காய்கறிகள் விற்கப்பட்டன. கடந்த வாரம் ஆடு, கோழிகள் விலை சரிந்து விற்கப்பட்டது.
ஆனால் நேற்று, ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது. 7 கிலோ எடை கொண்ட ஆடு, 7,000 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 550 ரூபாய்க்கு விற்கப்பட்டது, நாட்டுக்கோழிகள் கிலோவுக்கு, 100 ரூபாய் உயர்ந்தும், ஆடுகள் கிலோவுக்கு, 150 ரூபாய் விலை உயர்ந்தும் விற்கப்பட்டது.
குளித்தலை, லாலாப்பேட்டை, பஞ்சப்பட்டி, சேங்கல், தோகைமலை பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்கி சென்றனர்.

