ADDED : ஜூன் 09, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: லாரியில் மணல் கடத்தி வருவதாக, குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குளித்தலை சுங்ககேட்டில் எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, முசிறியில் இருந்து மணப்பாறை நோக்கி அதிவேக-மாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சட்டவி-ரோதமாக, ஐந்து யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரி-யவந்தது. போலீசார் லாரியை பறிமுதல் செய்து, திருச்சி மாவட்டம், திருப்பைஞ்சீலி கவுண்டம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் வாசுதேவன், 25, என்பவரை போலீசார் கைது செய்தனர்.