/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி
/
நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி
ADDED : நவ 08, 2024 01:24 AM
நெடுஞ்சாலை ஓரங்களில்
மரக்கன்றுகள் நடும் பணி
அரவக்குறிச்சி, நவ. 8-
நெடுஞ்சாலைத்துறை சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை முன்னிட்டு, தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில், நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.
அரவக்குறிச்சியில் இருந்து, சின்னதாராபுரம் செல்லும் சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. அரவக்குறிச்சி உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி நேரில் பார்வையிட்டு துவக்கி வைத்தார். உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்