/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 12, 2026 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரி-யர்கள் இயக்கம் சார்பில், மாவட்ட துணைத்த-லைவர் சங்கரேஸ்வரி தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், ஏழாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு, ஜூன் மாதத்-துக்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும்; கடந்த, 2021ல், தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்-கைகள் வலியுறுத்தப்பட்டன. காத்திருப்பு போராட்டத்தில், 20க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

