ADDED : செப் 13, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார், கள்ளப்பள்ளி, ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் கமிஷன் மண்டிகளில், கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று பூவன் தார், 350 ரூபாய், ரஸ்தாளி, 400 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வாழைத்தார்களை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.