கரூரில் ஊழல் ஒழிப்பு குறித்து புகார் தெரிவிக்க தனிப்பிரிவு
கரூரில் ஊழல் ஒழிப்பு குறித்து புகார் தெரிவிக்க தனிப்பிரிவு
ADDED : ஆக 20, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு குறித்து, புகார் தெரிவிக்க, தனி வாட்ஸ் ஆப் எண்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கரூர் எஸ்.பி., அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது:
தமிழகம்
முழுவதும் காவல் துறை தலைமை இயக்குனர் உத்தரவின்படி, ஊழல் ஒழிப்பு
தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலும், ஊழல்
ஒழிப்பு குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்க, தனிப்பிரிவு
தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 88077-09299 என்ற எண்ணை பொதுமக்கள்
தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். வாட்ஸ் ஆப் மூலமும் புகார்
தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
