ADDED : ஜூலை 25, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர், ஈரோடு சாலையில் சேரன் நகரில், நுாற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலையோரம் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்-போது குப்பைக்கு, சாலையோரம் தீயிட்டு எரிப்பது இந்த பகுதியில் வாடிக்-கையாக நடந்து வருகிறது. இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், புகை மூட்டத்தால், விபத்தில் சிக்குகின்றனர்.
சேகரிக்கப்படும் குப்பை அங்கிருந்து அகற்றப்பட்டு, குப்பை கிடங்கில் மட்டுமே கொட்டப்பட வேண்டும் என்ற நிலையில், தீயிட்டு எரிப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெ-றாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.