மரம் முறிந்து விழுந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு
மரம் முறிந்து விழுந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 17, 2025 01:59 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, குளித்தலையில், மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குளித்தலை, உழவர் சந்தை அண்ணா நகர் புறவழிச் சாலையில், கடுமையான சூறாவளி காற்று வீசியதில் ரயில்வே பிளாட்பாரம் அருகில் இருந்த புளியமரம் நேற்று காலை, 8:30 மணியளவில் முறிந்து விழுந்தது.
இதனால் புறவழிச்சாலையில், பைக், கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், மினி பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விழுந்த மரத்தை சரி செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
