ADDED : ஜன 12, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை சனி பிரதோஷத்தையொட்டி நந்-தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
இதேபோல், கடம்பவனேஸ்வரர், அய்யர்மலை ரத்தினகிரீஸ்-வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், குளித்தலை மீனாட்சிசுந்த-ரேஸ்வர் உள்ளிட்ட சிவாலங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்-தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

