/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழிமலை கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
/
புகழிமலை கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
ADDED : ஜூலை 13, 2024 08:18 AM
கரூர்: புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாத வளர்பிறை சஷ்டியை யொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில், மூலவருக்கு, ஆனி மாத வளர்பிறை சஷ்டியை யொட்டி பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகை யான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது.
சிறப்பு மலர் அலங்காரத்தில் மூலவர், பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்-தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், ஆனி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.