/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பட்டுக்கூடு ரூ. 2 லட்சத்திற்கு ஏலம்
/
பட்டுக்கூடு ரூ. 2 லட்சத்திற்கு ஏலம்
ADDED : டிச 20, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டுக்கூடு ரூ. 2 லட்சத்திற்கு ஏலம்
ராசிபுரம், டிச.20-
ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையம் உள்ளது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டு கூடுகளை, ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 337 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகப்பட்சமாக கிலோ, 630 ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக, 560 க்கும் விற்பனையானது. 337 கிலோ பட்டு கூடு, 2 லட்சம் ரூபாய்க்கு
விற்பனையானது.