/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டணம் இல்லாமல் வண்டல், களிமண் எடுத்து செல்லலாம்: கலெக்டர்
/
கட்டணம் இல்லாமல் வண்டல், களிமண் எடுத்து செல்லலாம்: கலெக்டர்
கட்டணம் இல்லாமல் வண்டல், களிமண் எடுத்து செல்லலாம்: கலெக்டர்
கட்டணம் இல்லாமல் வண்டல், களிமண் எடுத்து செல்லலாம்: கலெக்டர்
ADDED : ஏப் 26, 2025 01:26 AM
கரூர்:''கரூர் மாவட்டத்தில், 50 நீர்நிலைகளில் வண்டல், களிமண் ஆகியவற்றை கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து செல்ல, இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்,'' என கலெக்டர்
தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட் டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 6,051 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் சாகுபடிக்காக மட்டும், 125 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு உள்ளன.
அதேபோல், சிறுதானிய விதைகள், 13 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. எண்ணைய் வித்துக்கள் ஐந்து மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் இயல்பான மழையளவு, 32.30 மி.மீட்டராகும். நடப்பு ஏப்ரல் மாதம், 74.84 மி.மீ., மழை பெய்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், வெங்கமேடு, காந்தி கிராமம் ஆகிய உழவர் சந்தைகளில், 51.04 மெட்ரிக் டன் காய்கள், 19.37 லட்ச ரூபாய் மதிப்பில் விற்பனை நடந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள, 50 நீர்நிலைகளில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல், களிமண் ஆகியவற்றை கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து செல்ல, இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு, 10 முதல், 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் பதில் அளிக்க, அதிகாரிகள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், உதவி கலெக்டர் சுவாதி, வேளாண்மை துறை இணை இயக்குனர் சிவானந்தம், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சாந்தி, ஆர்.டி.ஓ., முகமது பைசல் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.