/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடி வாய்க்கால் படித்துறை சேதத்தால் அவதி
/
சிந்தலவாடி வாய்க்கால் படித்துறை சேதத்தால் அவதி
ADDED : அக் 30, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், அக். 30-
சிந்தலவாடி, கட்டளை தென்கரை வாய்க்கால் கரை படித்துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி அருகில் மாயனுாரில் இருந்து, கட்டளை தென்கரை வாய்க்கால் செல்கிறது. இங்கு மக்கள் குளிப்பதற்காக படித்துறை கட்டப்பட்டுள்ளது. இதில் குளித்து வந்தனர். தற்போது வாய்க்காலில் உள்ள படித்துறை, மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. படித்துறை சிதலமடைந்து, பெயர்ந்து இருப்பதால் மக்கள் வாய்க்காலில் நின்று குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, புதிய படித்துறை கட்டுவதற்கான நடவடிக்கையை பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.