ADDED : ஏப் 26, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, மகனை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.வேலாயுதம்பாளையம் திருகாடுதுறை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 48, லாரி டிரைவர். திருமணமாகவில்லை.
இவர் கடந்தாண்டு அக்., 28ல் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குணசேகரனின் தாய் லட்சுமி போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.