ADDED : மே 28, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, சின்னியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா, 39, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் வடிவேலு. 21, கோவையில் உள்ள தனியார் இரும்பு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்தவர் கடந்த, 26 அதிகாலை, 5:00 மணியளவில் கோவைக்கு புறப்பட்டவர் அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகனை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.