ADDED : ஜூலை 29, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, தோகைமலை
கருப்புகோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பாயி, 60. இவரது மகன் சரவணன், 35, கடந்த 20ம் தேதி இரவு 8:00 மணியளவில் கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வெகுநேரமாயும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகனை காணவில்லை என, தாய் கருப்பாயி கொடுத்த புகாரின் படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மகனை தேடி வருகின்றனர்

