/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தந்தை இறந்த துக்கத்தில் மகன் விபரீத முடிவு
/
தந்தை இறந்த துக்கத்தில் மகன் விபரீத முடிவு
ADDED : டிச 05, 2024 07:52 AM
குளித்தலை: தந்தை இறந்த துக்கத்தில், மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.குளித்தலை அடுத்த, போத்தராவுத்தன்பட்டி பஞ்., பன்னீர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல், 40. இவரது அக்கா ஜெய-சித்ரா உடல் நலம் பாதிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது
மகன் தீபக், 21, தன் தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் தந்தையும் விபத்தில் இறந்துள்ளார்.
இதனால் மகன் தீபக், தன் மாமா குழந்தை வேல் வீட்டில் வசித்து வந்தார். தந்தை இறந்த துக்-கத்தில் இருந்த தீபக் கடந்த,
2ல், மாட்டு கொட்டகையில் சேலையில் துாக்கிட்டு இறந்த நிலையில் இருந்தார். தோகை-மலை போலீசார் சடலத்தை
கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்-காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது
குறித்து குழந்தைவேல், 40, கொடுத்த புகார்படி தோகை-மலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.