/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாய்ந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்த ஊழியர்கள்
/
சாய்ந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்த ஊழியர்கள்
ADDED : செப் 21, 2024 02:54 AM
கரூர்: கரூரில், மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்ந்ததை, மின்வாரிய ஊழி-யர்கள் சரி செய்தனர்.கரூர் ரத்தினம் சாலையில், இரட்டை வாய்க்கால் சீரமைப்பு பணி, நேற்று இரவு நடந்தது. அப்போது, வாய்க்கால் ஓரத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் சாய தொடங்கியது. இதனால், பொக்லைன் இயந்திரம் மூலம், மின்சார டிரான்ஸ்பார்மர், வாய்க்-காலில் சாயாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பின், அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின்சார டிரான்ஸ்பார்மர் மூலம் செயல்பட்ட, மின் இணைப்புகள்
மாற்றி-யமைக்கப்பட்டு, அரைமணி நேரத்துக்கு பின், மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இதனால், கரூர் ரத்தினம் சாலை
பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.