/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஆக 29, 2025 01:16 AM
குளித்தலை :குளித்தலை அடுத்த, நாகனுார் காலனி சமுதாய மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தாசில்தார் இந்துமதி தலைமையில் நடந்தது.
தோகைமலை யூனியன் கமிஷனர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், தனி தாசில்தார் வெங்கடேசன், ஆர்.ஐ., முத்துக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் துறை, மின்சாரம், மாற்றுத்திறனாளிகள், சமூக நலத்துறை உள்ளிட்ட, 13 துறைகள் சார்பில் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை, குடும்ப அட்டை, பட்டா பெயர் மாற்றம், இடம் மாற்றம், ஆதார் கார்டு உள்ளிட்ட, 43 சேவைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, எம்.எல்.ஏ., மாணிக்கம் பெற்றுக் கொண்டார். மனுக்கள் அளித்த பொது மக்களுக்கு ஒப்புகை ரசீது கொடுக்கப்பட்டது.