ADDED : ஏப் 25, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
கரூர், மாநில அளவிலான, செஸ் போட்டி கரூரில் வரும் மே, 3 ல் நடக்கிறது.
இதுகுறித்து, கரூர் மாவட்ட செஸ் அசோஷியேசன் இணை செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் வி.என்.சி., மஹாலில் வரும் மே, 3ல், ஆனந்த் செஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான, 16 வது செஸ் போட்டி நடக்கிறது. அதில், எட்டு வயது முதல், 17 வயது வரையுள்ள மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தமாக, ஒரு லட்சத்து, ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பில் ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது. 25 பேருக்கு பரிசு வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, கரூர் மாவட்ட செஸ் அசோஷியேசன் இணை செயலாளர் சிவக்குமாரை, 97879-60669 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சேவல் சண்டை நடத்திய
