ADDED : ஜன 29, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, வரவனை பஞ்., பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 45, இவரது மகள் காவியா, 20, பி.காம்., முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த, 26 காலை, 8:00 மணியளவில் வீட்டிலிருந்து கரூரில் 'கோச்சிங் கிளாஸ்' செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.