/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாணவ, மாணவியர்களால் உயிரிழப்பை தடுக்க முடியும்
/
மாணவ, மாணவியர்களால் உயிரிழப்பை தடுக்க முடியும்
ADDED : ஜன 28, 2026 06:08 AM

கரூர்: '' சாலை விபத்துகளில், ஏற்படும் உயிரிழப்பு களை மாணவ, மாணவியர்களால் தடுக்க முடியும்,'' என, கரூர் தி.மு.க.,- எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பேசினார்.
கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கிய
பேரணியை, தொடங்கி வைத்த கரூர், தி.மு.க.,- எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் கடந்த, 2024ம் ஆண்டை விட, 2025ல் அதிகளவில் சாலை விபத்துகளில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில், ெஹல்மெட் அணியாமல் டூவீலரில் சென்ற பலர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், டூவீலரில் செல்கிறவர்கள் கட்டா யம் ெஹல்மெட் அணிய வேண்டும். மேலும், வீடுகளில் இருந்து டூவீலரில் செல்கிறவர்களிடம், ெஹல்மெட் அணியும்படி மாணவ, மாணவியர் வலியுறுத்த வேண்டும்.இதன் மூலம், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை, மாணவ, மாணவியர்களால் தடுக்க முடியும். இவ்வாறு பேசினார்.
மாவட்ட கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., ஜோஷ் தங்கையா, யங் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் உடனிருந்தனர்.

