/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழைநீர் சேகரிப்பு பேரணி மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
மழைநீர் சேகரிப்பு பேரணி மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : நவ 11, 2025 01:52 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியர் தங்களுடைய கைகளில், தாகம் தீர்க்கும் குடிநீர், தரமான குடிநீர், தாகம் காக்கும் வான் தந்த மழைநீரை மாசு இல்லாமல் காப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்றனர். மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சுரேஷ்குமார், உதவி நிர்வாக பொறியாளர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

