sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெள்ளியணை குளத்தை துார் வார கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

/

வெள்ளியணை குளத்தை துார் வார கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

வெள்ளியணை குளத்தை துார் வார கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

வெள்ளியணை குளத்தை துார் வார கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்


ADDED : ஜூலை 22, 2025 01:10 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வெள்ளியணை, பெரிய குளத்தை துார் வார வேண்டும் என, வெள்ளியணை பஞ்., முன்னாள் உறுப்பினர் அப்புசாமி தலைமையில், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: கரூர் அருகில் வெள்ளியணையில், 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளம் உள்ளது. இதில் நீர் நிரம்பினால், 40 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகளில் நீர் அதிகளவில் சுரக்கும். 1976ல் திண்-டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், அழகாபுரி கிராமத்தில், குடகனாறு அணை கட்டி முடிக்கப்பட்டது. அதிலிருந்து, 120 கன-அடி தண்ணீர் வரும் வகையில், 55 கி.மீ.,க்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக குளம் மற்றும் குடகனாறு அணையில் இருந்து வரும் கால்வாய் துார் வாரப்படாமல் உள்ளது. குளத்தில் தண்ணீர் வறண்டு போனதால், நேரடியாக பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும், சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. குளத்தை நேரில் பார்வையிட்டு, துார்வாரிட தேவையான ஏற்பா-டுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, கூறப்பட்-டுள்ளது.






      Dinamalar
      Follow us