/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேளாண் ஏற்றுமதி சான்றிதழ் பெற மானியம்
/
வேளாண் ஏற்றுமதி சான்றிதழ் பெற மானியம்
ADDED : ஜூலை 27, 2025 01:13 AM
கரூர் :வேளாண் விளை பொருட்களை, ஏற்றுமதி மேற்கொள்வதற்கான சான்றிதழ்களை பெறுவதற்காக மானியம் வழங்கப்படுகிறது.
மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்ன வெங்காயம், வெள்ளரி போன்றவற்றை பயிரிடும் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி குறித்தான சான்றிதழ், இறக்குமதி, ஏற்றுமதி குறியீடு, பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் டிஜிட்டல் கையொப்பம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ள, 15 ஆயிரம் ரூபாய்- பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டம் தொடர்பாக, கரூர் வேளாண் வணிகம் துணை இயக்குனரை, 99655 88226 என்ற மொபைல் எண் மற்றும் வேளாண்மை அலுவலர்களை 82209 15157, 99422 86337, 94895 08735 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களையும், ஏற்றுமதிக்கான வழிமுறைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.இத்தகவலை, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.