/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாட்டு சர்க்கரை ஆலையை மூடக்கோரி திடீர் மறியல்; ஏழரை மணி நேரம் டிராபிக்: போக்குவரத்து பாதிப்பு
/
நாட்டு சர்க்கரை ஆலையை மூடக்கோரி திடீர் மறியல்; ஏழரை மணி நேரம் டிராபிக்: போக்குவரத்து பாதிப்பு
நாட்டு சர்க்கரை ஆலையை மூடக்கோரி திடீர் மறியல்; ஏழரை மணி நேரம் டிராபிக்: போக்குவரத்து பாதிப்பு
நாட்டு சர்க்கரை ஆலையை மூடக்கோரி திடீர் மறியல்; ஏழரை மணி நேரம் டிராபிக்: போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 26, 2024 06:28 AM
ப.வேலுார்: ரங்கம்பாளையத்தில் உள்ள நாட்டு சர்க்கரை ஆலையை மூடக்கோரி, கரும்பு லாரியை நிறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கபிலர்மலை - நல்லுார் சாலையில், ஏழரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ப.வேலுார் தாலுகா, கபிலக் குறிச்சி அடுத்த ரங்-கம்பாளையத்தில், தேங்காய் நார் மில் செயல்-பட்டு வந்தது. அவற்றை வாங்கிய நபர், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலையாக மாற்றினார். பழைய சர்க்கரையை எடுத்து வந்து, ஆகாத கழி-வுகளை சேர்த்து, அதிகளவில் ஆசிட் ஊற்றி பில்டர் செய்து, வெளிநாட்டுக்கு அனுப்பப்படுகி-றது. மேலும், இந்த கலரில் உள்ள கருப்பு சர்க்க-ரையை அதிகப்படியான ஆசிட்டுகளை ஊற்றி கிளியர் செய்து, கோல்ட் கலரில் மாற்றி ஏற்றும-தியும் செய்கின்றனர்.
ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல், விளை நிலத்தில் வெளியேற்றுகின்றனர். அதேபோல், துர்நாற்றம் வீசுவதால், கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளா-கின்றனர். மேலும், நிலத்தடி நீர், விவசாய கிண-றுகள் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், ஆவேசமடைந்த கிராம மக்கள், ஆலையை மூடி, 'சீல்' வைக்கக்கோரி, நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், ரங்கம்பளையம், சுப்பை-யாம்பாளையம், செஞ்சுடையம்பாளையம், சீத்-தக்காடு, கபிலக்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று காலை, 8:00 மணிக்கு, சாலை நடுவில் கரும்பு லாரியை நிறுத்தி, மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, ஆர்.டி.ஓ., சுகந்தி, ப.வேலுார் தாசில்தார் முத்துக்-குமார், இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார், சம்பவம் இடத்துக்கு சென்று பேச்சு-வார்த்தை நடத்தினர். அப்போது, ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து, மாலை, 3:30 மணிக்கு, மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக, கபிலர்-மலை - நல்லுார் சாலையில், ஏழரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.