தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நிழற்கூடம் இல்லாத பஸ் ஸ்டாப்பால் அவதி

நிழற்கூடம் இல்லாத பஸ் ஸ்டாப்பால் அவதி

நிழற்கூடம் இல்லாத பஸ் ஸ்டாப்பால் அவதி


ADDED : ஆக 30, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்,:கரூர் அருகே, தான்தோன்றிமலையில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் - திண்டுக்கல் சாலை, தான்தோன்றி மலையில் பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், கரூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் உள்ளது. மேலும், தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒருங்கிணைந்த நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், மாவட்ட அரசு விளையாட்டு மைதானம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் பஸ்சில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப்பில் இரண்டு புறமும், நிழற்கூடம் இல்லை. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மழை, வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, தான்தோன்றிமலை பஸ் ஸ்டாப்பில், இரண்டு புறமும் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் வகையில், கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us