/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அவதி
/
சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அவதி
ADDED : செப் 26, 2024 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்டெக்ஸ் தொட்டியில்தண்ணீர் இல்லாததால் அவதி
கிருஷ்ணராயபுரம், செப். 26-கிருஷ்ணராயபுரம் அடுத்த பஸ் ஸ்டாப்பில், பயணிகளின் வசதிக்காக சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் அவ்வப்போது குடிநீர் ஏற்றி வந்தனர். தற்போது, சில வாரங்களாக குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றாமல் இருப்பதால், மதிய நேரத்தில் குடிக்க தண்ணீரின்றி பயணிகள் அவதிப்படுகின்றனர். தற்போது வெயில் கொளுத்தி வருவதால், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, டீ கடைகளுக்கு சென்று தண்ணீர் குடித்து தாகத்தை தணிக்கின்றனர். எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், தினந்தோறும் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

