/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து நெரிசல் பகுதியில் வாகனங்கள் நிறுத்தத்தால் அவதி
/
போக்குவரத்து நெரிசல் பகுதியில் வாகனங்கள் நிறுத்தத்தால் அவதி
போக்குவரத்து நெரிசல் பகுதியில் வாகனங்கள் நிறுத்தத்தால் அவதி
போக்குவரத்து நெரிசல் பகுதியில் வாகனங்கள் நிறுத்தத்தால் அவதி
ADDED : ஏப் 02, 2024 04:44 AM
கரூர்: கரூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில், நீண்ட நேரம் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகிறது. இதை, போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளை சுற்றி, கோவை சாலை, திருச்சி சாலை, தின்னப்பா கார்னர் சாலை மற்றும் ஜவஹர் பஜார் சாலைகள் உள்ளது. இந்த பகுதிகளில், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள பெரும்பாலான ஜவுளி கடைகள், நகை கடைகள், பேன்ஸி ஸ்டோர்களுக்கு பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை.
இதனால், வியாபார நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்படுகிறது. இதனால், கரூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அடிக்கடி நெரிசலில் சிக்குவதால், நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, நோ-பார்க்கிங் என போலீசாரால் அறிவிக்கப்பட்ட பகுகளில் கார் உள்ளிட்ட வாகனங்களை பலமணி நேரம் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதை கரூர் நகர போக்குவரத்து போலீசார், கண்டு கொள்வது இல்லை.
இதனால், கரூர் நகர பகுதிகளில் நாள் தோறும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, கரூர் போலீசார், கார் உள்ளிட்ட வாகனங்களை நோ-பார்க்கிங் பகுதிகளில் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

