ADDED : செப் 24, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலையை சேர்ந்தவர் அருண்குமார், 46; இவர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த போலீஸ் ஏட்டு அருண்குமார், குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று, வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்-கொலை செய்து கொண்ட போலீஸ் ஏட்டு மனைவி கிருத்திகா, மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில், உதவியாளராக பணி-யாற்றி வருகிறார். சச்சின், அஸ்வின் என்ற இரண்டு மகன்கள் உள்-ளனர். வேலாயுதம் பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.