/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
/
மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED : ஜூன் 08, 2025 12:56 AM
கரூர், கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கரூர் மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 11ல் கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது.
பின், தேரோட்டம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், கரும்பு தொட்டிலில் குழந்தையை எடுத்து வருதல், மாவிளக்கு ஊர்வலம் என பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த, 28ல், முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் விழா நடந்தது. நேற்று கரூர் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். இன்று அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சியுடன், திருவிழா நிறைவடைகிறது.