sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டி ஏப்.,30க்குள் பதிவு செய்ய அழைப்பு

/

தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டி ஏப்.,30க்குள் பதிவு செய்ய அழைப்பு

தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டி ஏப்.,30க்குள் பதிவு செய்ய அழைப்பு

தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டி ஏப்.,30க்குள் பதிவு செய்ய அழைப்பு


ADDED : ஏப் 27, 2025 04:18 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடக்கும் பள்ளி, கல்லுாரிக-ளுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகளில் பங்கேற்க, ஏப்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாணவ, மாணவியருக்கு போட்-டிகள் நடந்தப்பட்டு வருகின்றன. கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில், மே 9, 10 ஆகிய நாட்களில், பிளஸ் 1, 2, மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடக்கின்றன.

இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பதிவு செய்யும் படிவங்களை, தமிழ் வளர்ச்சித் துறையின் https:// tamilvalarchithurai.tn. gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ அல்லது கரூர் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

வரும் ஏப்., 30க்குள் நேரில் பதிவு செய்ய வேண்டும். இப்-போட்டியில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளி ஆகிய மாணவ, மாணவியர் பங்குபெறலாம்.

கல்லுாரி போட்டிகளில் கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல், பல்தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், வேளாண் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்துகொள்ளலாம்.

மாவட்ட போட்டிகளில் முதல் பரிசுபெறும் மாணவர் வரும் மே 17ல் சென்னையில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us