/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.88 லட்சத்துக்கு கதர் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு
/
ரூ.88 லட்சத்துக்கு கதர் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு
ரூ.88 லட்சத்துக்கு கதர் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு
ரூ.88 லட்சத்துக்கு கதர் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு
ADDED : அக் 03, 2025 01:38 AM
கரூர் மாவட்டத்தில், 88.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கதர் அங்காடியில் காந்தி
ஜெயந்தியை முன்னிட்டு தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. ஆர்.டி.ஓ., முகமது பைசல் தொடங்கி வைத்தார். கதரங்காடி மேலாளர் முத்துசாமி கூறியதாவது:
கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனையின் போது, 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 88.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அரசு- அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் ஆகியோருக்கு எளிய கடன் வசதி செய்யப்பட்டுள்ளன.
கதர், பட்டு ரகங்களுக்கு, 30 சதவீதம், சில பட்டு ரகங்களுக்கு,
50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
தேன், குளியல் சோப்புகள் பற்றும் சலவைசோப்புகள், பத்தி, சாம்பிராணி, மெழுகுபர்த்தி, ஜவ்வாது, வலி நிவாரணி தைலம், ஷாம்பு, பனை பொருட்கள் உள்ளிட்ட பலவகையான கிராம பொருட்கள் கதரங்காடியில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் காதி கிராப்ட் பொருட்களை, https://tnkvib.org/ என்ற ஆன்லைன் மூலமும் வாங்கலாம்.
இவ்வாறு, அவர், கூறினார்.
குடிசை தொழிலாளர்கள் மாவட்ட ஆய்வாளர் சரவணகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.