/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வரும் 4 முதல் தொடக்கம்
/
ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வரும் 4 முதல் தொடக்கம்
ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வரும் 4 முதல் தொடக்கம்
ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வரும் 4 முதல் தொடக்கம்
ADDED : அக் 31, 2025 01:02 AM
கரூர், வரும் 4 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வகுப்பு தொடங்கும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இது குறித்து, அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்   பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வகுப்புகள் வரும் நவ., 4 முதல்    இணைய வழியில் நடத்தப்படவுள்ளது.  இப்பயிற்சி வகுப்புகள்  சிறப்பான பயிற்றுனர்களை  கொண்டு  ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படவுள்ளது. பயிற்சியில் சேர, 04324-223555  மற்றும்  6383050010 என்ற எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

