ADDED : ஆக 07, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, ரேஷன் கடை அரிசி மூட்டைகளை பதுக்கிய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம் இரவு, கரூர் கணபதிபாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 50 கிலோ ரேஷன் அரிசியை, மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த சீனிவாசன், 32, என்பவரை போலீசார் கைது செய்தனர். அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.