/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று மதியம் சந்திர கிரகணம் கோவில்களில் நடை மூடல்
/
இன்று மதியம் சந்திர கிரகணம் கோவில்களில் நடை மூடல்
ADDED : மார் 03, 2026 04:19 AM
கரூர்: கரூர் கோவில்களில், சந்திர கிரகணத்தையொட்டி, இன்று நடை சாத்தப்படுகிறது.
சந்திரகிரகணம் இன்று மதியம், 3:20 மணி முதல் மாலை, 6:47 வரை நிலவுகிறது. இதனால், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று மதியம், 12:30 மணிக்கு நடை சாத்தப்பட்டு இரவு, 7:15 மணிக்கு திறக்கப்படும்.
அதேபோல், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று காலை, 10:00 மணிக்கு நடை சாத்தப்-பட்டு இரவு, 7:30 மணிக்கு திறக்கப்படும். அதே போல், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், நெரூர் காசி விஸ்வநாதர் கோவில், பாலமலை, புகழி-மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும், இன்று மதியம் நடை சாத்தப்பட்டு, இரவு திறக்கப்படும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

