sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஓடும் பஸ்சில் நெஞ்சுவலி ஏற்பட்டும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர்

/

ஓடும் பஸ்சில் நெஞ்சுவலி ஏற்பட்டும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர்

ஓடும் பஸ்சில் நெஞ்சுவலி ஏற்பட்டும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர்

ஓடும் பஸ்சில் நெஞ்சுவலி ஏற்பட்டும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர்


ADDED : மே 11, 2024 07:28 AM

Google News

ADDED : மே 11, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி : அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ், ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டது. அரவக்குறிச்சி வழியாக, மதுரை செல்லும் பஸ்சை அத்தாணியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 45, என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக கருணாநிதி என்பவர் உடன் வந்தார். பஸ்சில், 45 பயணிகள் பயணம் செய்தனர். அரவக்குறிச்சி நகரில் பஸ் நுழைந்த போது, டிரைவர் கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனே, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வெளியே பஸ்சை நிறுத்தி விட்டு நெஞ்சு வலி பற்றி விவரம் கூறியுள்ளார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காத்திருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். காலை 10:00 மணி அளவில் சிகிச்சை குணமடைந்து கிருஷ்ணமூர்த்தி புறப்பட்டு சென்றார். மாற்று ஓட்டுனர் வரவழைக்கப்பட்டு பஸ் மதுரைக்கு புறப்பட்டது.

ஓடும் பஸ்சில் நெஞ்சுவலி வந்தும், தைரியமாக பயணிகளை காப்பாற்றி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்ற அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை பயணிகள், பொதுமக்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us