sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது

/

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது


ADDED : நவ 24, 2025 01:20 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: அமராவதி ஆற்றுப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணை நிரம்பியது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு, 325 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில், அமரா வதி ஆற்றுப்பகுதிக-ளான, அரவக்குறிச்சி, சின்னதாரா புரம், ராஜபுரம், க.பரமத்தி, செட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்ப-ணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நிரம்பியது. கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நில-வரப்படி வினாடிக்கு, 1,765 கன அடி தண்ணீர் வந்தது. காவிரி-யாற்றில், 645 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,120 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

ஆத்துப்பாளையம் அணை

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, 31 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.58 அடியாக

இருந்தது.

அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு, தற்கா-லிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அணைப்

பகுதியில், 12.2 மி.மீ., மழை பெய்தது.






      Dinamalar
      Follow us