/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது
/
பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது
ADDED : டிச 20, 2025 07:25 AM
கரூர்: கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, நேற்று காலை நிலவரப்படி ஆற்றில் வினாடிக்கு, 492 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், அமராவதி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும், மழை காரண-மாக கரூர் அருகே உள்ள, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்ப-ணைக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், பெரிய ஆண்-டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது.
* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 9,826 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9,543 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. சம்பா சாகுபடி பணிக்காக, 9,791 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், 920 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.71 அடியாக இரு ந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்-பட்டுள்ளது.

