ADDED : செப் 14, 2024 07:07 AM
அ நிறம் | அளவு
கரூர்: திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வரும், 17ல் செயல்படாது என, பாஸ்போர்ட் அலுவலர் ஷரணப் பாதல்வார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிலாடி நபியையொட்டி வரும், 17ல் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட் சேவை மையம் மற்றும் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
