sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சரியான நேரத்திற்கு வராத டவுன் பஸ் மாணவர்கள் மறியல் போராட்டம்

/

சரியான நேரத்திற்கு வராத டவுன் பஸ் மாணவர்கள் மறியல் போராட்டம்

சரியான நேரத்திற்கு வராத டவுன் பஸ் மாணவர்கள் மறியல் போராட்டம்

சரியான நேரத்திற்கு வராத டவுன் பஸ் மாணவர்கள் மறியல் போராட்டம்


ADDED : செப் 19, 2024 07:27 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி கிராமத்திற்கு டவுன் பஸ் தாமதமாக வருவதால், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், நேற்று காலை டவுன் பஸ்சை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகிளிப்பட்டி கிராமத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிய டவுன் பஸ் வழித்தடம்

திறக்கப்-பட்டது. கரூர் முதல் லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, புனவாசிப்-பட்டி வழியாக டவுன் பஸ் சென்றது. மகிளிப்பட்டி வழியாக

காலை, 8:40 மணிக்கு டவுன் பஸ் வருகிறது. இந்த பஸ்ஸில் இங்-குள்ள மாணவர்கள் ஏறி, லாலாப்பேட்டை அரசு பள்ளிக்கு படிக்க

செல்கின்றனர்.கடந்த சில நாட்களாக சரியான நேரத்திற்கு பஸ் வருவதில்லை. இதனால் குறித்த நேரத்திற்கு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு

செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மகிளிப்பட்டி கிரா-மத்துக்கு நேற்று காலை, 9:20 மணிக்கு டவுன் பஸ் வந்தது. மாணவ,

மாணவிகள் பஸ்சை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர்கள்,

பெற்றோர்களுடன் பேச்சுவர்த்தை நடத்தினர். அப்போது, சரியான நேரத்திற்கு டவுன் பஸ் இயக்குவதற்கான உறுதி தரப்பட்டது.

அதன்படி மாணவர்கள் கலைந்து சென்று, பஸ்ஸில் ஏறி பள்ளிக்கு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பர-பரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us